அமைந்தகரை 8வது மண்டலத்தில் பிளாஸ்டிக் கவர்கள் விற்ற 18 கடைகளுக்கு அதிரடி சீல்: அதிகாரிகள் நடவடிக்கை



அண்ணாநகர்: அமைந்தகரை 8வது மண்டலத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் விற்பனை செய்த 18 கடைகளுக்கு வருவாய் துறை அதிகாரிகள்  அதிரடியாக சீல் வைத்தனர். அமைந்தகரை 8வது மண்டலத்துக்கு உட்பட்ட பகுதியில்  டீ கடை, பிரியாணி கடை, பேக்கரி, துணி கடைகள் மற்றும் ஓட்டல்கள் உள்ளது. இங்கு,  அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாக  சுகாதாரத்துறை அலுவலர் விஜயக்குமார்,  வருவாய் துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். அதன் அடிப்படையில் சம்பந்தபட்ட இடங்களில் சென்று அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது, கடைகளுக்கு விற்பனை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்களை பறிமுதல் செய்து உரிமையாளருக்கு அபராதம் விதித்தனர். மேலும் இனிமேல் பிளாஸ்டிக் கவர்கள் விற்பனை செய்தால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் எனவும் அதிகாரிகள்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog