600 மில்லியன் டாலர் இலங்கைக்கு நிதியுதவி: அதிபரின் ஊடகப் பிரிவு அறிவிப்பு



ெகாழும்பு: பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண உலக வங்கி 600 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்க ஒப்புக் கொண்டுள்ளது என்று இலங்கை அதிபரின் ஊடகப் பிரிவு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக எண்ணெய், எரிவாயு, உணவுப்பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை மிகக் கடுமையாக உயர்ந்துள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு மாத காலத்துக்கும் மேலாக தற்போது ஆட்சியில் உள்ள அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோர் பதவி விலகக்கோரி பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இலங்கை மக்களின் எதிர்ப்பு காரணமாக ஏற்கனவே பதவியில் இருந்த பல அமைச்சர்கள் பதவி விலகியுள்ள சூழலில், தற்போதைய நெருக்கடியை சமாளிக்க இலங்கை அரசு பல நடவடிக்கைகளை...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog